Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூவை நாக்கால் சுத்தம் செய்த வாலிபர் அவமானத்தில் தற்கொலை

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (00:26 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 வயது நபர் ஒருவரை ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக பொதுமக்கள் முன்னிலையில் தங்களுடைய ஷூவை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தின் அவமானம் தாங்காமல் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் காசிம் ஷேக் என்பவரை அவரது முன்விரோதிகள் மார்க்கெட் பகுதியில் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவர்களில் ஒருவன் தனது ஷூவை நாக்கால் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

பலர் முன்னிலையில் அவமானம் அடைந்த காசிம் ஷேக், பின்னர் வீடு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் அவர் விரிவாக கடிதம் எழுதி வைத்துள்ளதால், அவரது தற்கொலைக்கு காரணமான 4 பேரையும் மகாராஷ்டிரா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments