ஷூவை நாக்கால் சுத்தம் செய்த வாலிபர் அவமானத்தில் தற்கொலை

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (00:26 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 வயது நபர் ஒருவரை ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக பொதுமக்கள் முன்னிலையில் தங்களுடைய ஷூவை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தின் அவமானம் தாங்காமல் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் காசிம் ஷேக் என்பவரை அவரது முன்விரோதிகள் மார்க்கெட் பகுதியில் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவர்களில் ஒருவன் தனது ஷூவை நாக்கால் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

பலர் முன்னிலையில் அவமானம் அடைந்த காசிம் ஷேக், பின்னர் வீடு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் அவர் விரிவாக கடிதம் எழுதி வைத்துள்ளதால், அவரது தற்கொலைக்கு காரணமான 4 பேரையும் மகாராஷ்டிரா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments