Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சிளங் குழந்தையின் மூக்கை கடித்த எலி: செவிலியர் பணியிடை நீக்கம்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (14:29 IST)
மத்திய பிரதேசத்தில்  செவிலியர்களின் கவனக்குறைவால் பச்சிளங் குழந்தையின் மூக்கை எலி கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளங் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த குழந்தையின் மூக்கை எலி கடித்துக் குதறியது.

இந்தச் சம்பவம் வெளியே கசிந்ததும்  சோனாலி என்ற  செவிலியரை மருத்துவமனை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது. குழந்தை கண்காணிப்பாளர் ஒருவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் அரசு பொதுமருத்துவமனையில் எலி கடித்ததால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

Show comments