Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறந்த மகளுக்கு வாசனை திரவியங்கள் பூசிய இந்திராணி

இறந்த மகளுக்கு வாசனை திரவியங்கள் பூசிய இந்திராணி
, சனி, 5 செப்டம்பர் 2015 (20:15 IST)
கொலை செய்து இறந்த தனது மகள் குறித்து மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக லிப் ஸ்டிக், வாசனை திரவியங்களை பூசியுள்ளார்.
 

 
பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி (43). இவர் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை தங்கை என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்துள்ளார்.
 
இந்த சம்பவம் 3 ஆண்டுகள் கழித்து வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனையடுத்து, இந்திராணி, இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா சஞ்சீவ் கன்னா மற்றும் கார் ஓட்டுநர் ஷாம் ராய் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். 
 
இந்நிலையில், ஷீனா போராவை கொலை செய்த பிறகு, அவரது உடலை காரில் எடுத்துச் செல்லும் போது காவல்துறைக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, அவரை அலங்கரித்து கொண்டு சென்றதோடு, ஷீனா போரா உடலில் வாசனை திரவியங்களையும் பூசிக் கொண்டு எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil