Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திராணி முகர்ஜிக்கு நினைவு திரும்பவில்லை: மருத்துவர்கள்

இந்திராணி முகர்ஜிக்கு நினைவு திரும்பவில்லை: மருத்துவர்கள்
, ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (11:38 IST)
அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ஷீனா போராவுக்கு சுயநினைவு திரும்பவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


 
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் பீட்டர் முகர்ஜி. அவரது மனைவி இந்திராணி முகர்ஜி. இவர்கள் இருவரும் இணைந்து தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்தனர். பின்னர் அந்த நிர்வாகத்தில் இருந்து இருவரும் விலகினர்.
 
இந்திராணிக்கும் அவரது முதல் கணவர் சித்தார்த் தாஸூக்கும் ஷீனா போரா என்ற மகளும், மைக்கேல் போரா என்ற மகனும் பிறந்தனர். அதேபோல பீட்டர் முகர்ஜிக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் ராகுல் முகர்ஜி.
 
இந்நிலையில், ஷீனா போரா கடந்த 2012-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் வனப்பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்டன. மர்ம நபர்கள் சிலர் ஷீனா போராவைக் கொலை செய்ததாத முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம் ராயை சந்தேகத்தின் பேரில் சில நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது குடும்பத் தகராறு காரணமாக ஷீனா போராவை, இந்திராணி முகர்ஜியின் தூண்டுதலின் பேரில் தானும், சஞ்சீவ் கன்னாவும் இணைந்து கொலை செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி உள்பட மூன்று நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில்  மன அழுத்தம் காரணமாக அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் சுயநினைவை இழந்த இந்திராணி முகர்ஜி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர அளித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து அபாய நிலையிலேயே இருப்பதாகவும், சுயநினைவை அவர் அடையவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil