Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது மகளையே கொலை செய்த ஸ்டார் டிவியின் முன்னாள் சி.யி.ஒ மனைவி

தனது மகளையே கொலை செய்த ஸ்டார் டிவியின்  முன்னாள் சி.யி.ஒ மனைவி
, வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (15:33 IST)
ஸ்டார் டிவியின்  முன்னாள் சி.யி.ஒ மனைவி  தனது மகளையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்டார் டிவியின் சி.யி.ஒ  மனைவி  இந்திராணியின் மகள் ஷீனா மர்மான முறையில்  கொலைச் செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் , பிணமாக மும்பை போலீஸார்  மீட்டனர். இந்த கொலை வழக்கு பற்றி எந்த துப்பும் கிடைக்கததால் இந்த வழக்கு கிடப்பில் போட்டப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு  இந்திராணியின் கார் ஒட்டுநர் ஷாம்ராய் வாகனச்சோதனையில் துப்பாக்கியுடன் பிடிப்பட்டார் .இவரிடம் தொடர்ந்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
ஸ்டார்  டிவியின் முன்னாள் சி.யி.ஒ பீட்டர் முகர்ஜியை இந்திராணி கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 43 வது வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்யும் போது இவருடைய குழந்தைகளான ஷீனா மற்றும் மகன் மிகேலை தனது தங்கை ,சகோதரன் என்று பீட்டர் முகர்ஜிக்கு அறிமுகம் செய்துள்ளார்.

இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி மகன் ராகுலை ஷீனா காதலித்து வந்துள்ளார் .இதை அறிந்த இந்திராணி ஆத்திரமடைந்து தனது மகளையை  தூப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதையடுத்து அவரது வீட்டில் இந்திராணியை போலீஸார் கைது செய்துள்ளனர்.மேலும் மும்பை போலீஸார்  பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஷீனா போரா கொலை வழக்கில் உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளவே ராகுலை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து வருகிறோம் என்று மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா  தெரிவி்த்தார்

Share this Story:

Follow Webdunia tamil