Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அபாய கட்டத்தை தாண்டினார் இந்திராணி முகர்ஜி

அபாய கட்டத்தை தாண்டினார் இந்திராணி முகர்ஜி
, ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (20:57 IST)
கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி இப்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.


 

 
ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி  நெஞ்சு நெஞ்சுவலியால் மும்பையில் உள்ள ஜே.ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவர் சுயநினைவு இழந்த நிலையில் காணப்படுவதாகவும், இந்திராணியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. 
 
சிறையில்,அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு இந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்திராணி முகர்ஜி அபாய கட்டத்தை தாண்டியிருப்பதாகவும், நலமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திராணி இன்னும் 48 மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று ஜே.ஜே மருத்துவமனை டீன்  லகானே கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil