Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திராணி முகர்ஜியை கொலை செய்ய சதி? போலீசார் விசாரணை

இந்திராணி முகர்ஜியை கொலை செய்ய சதி? போலீசார் விசாரணை
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (12:01 IST)
ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 
 
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் ராஜேஷ் கண்ணா, இந்திராணியின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட நான்குபேர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார். வலிப்பு நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை அவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டது மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகு தெரியவந்தது.
 
இந்திராணி முகர்ஜி சிறையில் இருந்த போது அவருக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil