Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி: இண்டிகோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (06:52 IST)
கொரோனா பரவல் காரணமாக இண்டிகோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு விமான பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதன் காரணமாக இண்டிகோ நிறுவனம் 20 சதவீத விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே விமான பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் பயண தேதி மாற்றி கொள்ளவோ அல்லது விமான பயணத்தை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெறவோ செய்து கொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
இதற்காக அந்நிறுவனம் மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments