Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓமன் கடலில் 13 இந்தியர்கள் மாயம்.. விரைகிறது இந்திய போர் கப்பல் மற்றும் விமானம்..!

Mahendran
புதன், 17 ஜூலை 2024 (13:57 IST)
ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் திடீரென கவிழ்ந்ததில் அந்த கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமாகியுள்ளதை அடுத்து இந்தியர்களை மீட்க இந்திய போர் கப்பல் மற்றும் விமானம் விரைகிறதாக உள்ளன

ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 இந்தியர்கள் மற்றும் மூன்று இலங்கையை சேர்ந்தவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் அவர்களை தேடும் பணியில் ஓமன் கப்பல் படை ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் காணாமல் போன 13 இந்தியர்களை கண்டுபிடிக்க இந்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது இந்திய போர் கப்பல் மற்றும் விமானம் ஓமன் கடல் பகுதிக்கு விரைந்து உள்ளதாகவும் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விபத்து நடந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆகும் நிலையில்  காணாமல் போன இந்தியர்கள் உயிருடன் இருப்பார்களா? அவர்களை இந்திய போர்க்கப்பல் மீட்டு கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments