Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (19:27 IST)
திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதா மாநிலங்களவவையில் ஒரு மனதாக நிறைவேறியது.


 
மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் மசோதா 2014 ஐ இன்று மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி தாக்கல் செய்தார். இதையடுத்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்த விவகாரத்தில் அவையில் உறுப்பினர்கள் வேறுபட்டு இருப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர்களின் இந்த தனிநபர் மசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

Share this Story:

Follow Webdunia tamil