Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்புப் பணத்தை மீட்க ஸ்விட்சர்லாந்த் செல்லும் இந்திய அதிகாரிகள் குழு

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (04:47 IST)
ஸ்விட்சர்லாந்தில் நாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை பெற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக இந்திய அதிகாரிகள் குழு விரைவில் அந்நாட்டுக்குச் செல்லவுள்ளது.


 


 
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஜெனீவா சென்றிருந்தபோது, ஸ்விட்சர்லாந்து அதிபர் ஜோஹன் ஷ்னைடர் அம்மானைச் சந்தித்து, கருப்புப் பண விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இதைத்தொடர்ந்து, அந்நாட்டு உயர் அதிகாரிகள் புதன்கிழமை டெல்லி வந்து மத்திய நிதியமைச்சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பிலான வரி மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
 
கருப்புப் பணம் குறித்து தகவல்களைத் தாமாகவே பகிர்ந்து கொள்ள ஏதுவான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் தற்போது எங்களிடம் உள்ளன.
 
இதன் ஒரு பகுதியாக இரு நாட்டு நிபுணர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாத மத்தியில் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இந்திய அதிகாரிகள் குழு ஸ்விட்சர்லாந்து செல்லும் எனத் தெரிகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments