Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. பாதுகாக்க போர்க்கப்பல் விரைவு..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (18:08 IST)
இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ட்ரோன் மூலம் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் கப்பலை காப்பாற்ற இந்திய போர்க்கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 
 
 இந்திய கச்சா எண்ணெய் கப்பல் கடலில் வந்து கொண்டிருந்தபோது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை அடுத்து கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல் படையின் விக்ரம் என்ற போர் கப்பல் விரைந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 
 
கச்சா எண்ணெய் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பாதுகாப்பு துறையும் தெரிவித்துள்ளது. 
 
கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பல் சென்று கொண்டிருப்பதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் போர்க் கப்பல் சம்பவ இடத்திற்கு சென்று விடும் என்றும் கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments