Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4.5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து ரயில் இயக்கம்: இந்தியாவில்தான் இத்தனை வேகம்!

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (16:07 IST)
இந்திய பொறியாளர்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் ரயில்பாதையில் 4.5 மனி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து பின்னர் மீண்டும் ரயிலை இயக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே கொட்டவல்சா மற்றும் பெந்திருத்தி இடையே எண் 484 ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. இங்கு நான்கு இருப்புப்பாதை செல்வதால், எப்போதும் ரயில்கள் வந்து செல்லும் பரபரப்பான வழித்தடமாகும். 
 
இதனால், இப்பகுதி மக்கள் ரயில்வே இருப்புப்பாதையை கடக்க முடியாமல், அவதிப்படுவதும், ரயிலில் அடிபட்டு பலியாவதும் அதிக அளவில் நடந்துவந்தது. இதனால், இங்கு சுரங்கபாதை அமைக்க 2017 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இந்த சுரங்கபாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்து, 4.5 மணி நேரத்தில் சுரங்கப்பாதையை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கினர். 
 
சுரங்கப்பாதை அமைக்க, தொடங்கப்பட்ட பணி அடுத்த சில மணிநேரத்தில் முடிந்து மீண்டும் ரயில் இயக்கப்பட்டதை பார்த்து அப்பகுதி மக்கள் வியந்துவிட்டனர். இவர்களின் வேலையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments