Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4.5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து ரயில் இயக்கம்: இந்தியாவில்தான் இத்தனை வேகம்!

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (16:07 IST)
இந்திய பொறியாளர்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் ரயில்பாதையில் 4.5 மனி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து பின்னர் மீண்டும் ரயிலை இயக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே கொட்டவல்சா மற்றும் பெந்திருத்தி இடையே எண் 484 ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. இங்கு நான்கு இருப்புப்பாதை செல்வதால், எப்போதும் ரயில்கள் வந்து செல்லும் பரபரப்பான வழித்தடமாகும். 
 
இதனால், இப்பகுதி மக்கள் ரயில்வே இருப்புப்பாதையை கடக்க முடியாமல், அவதிப்படுவதும், ரயிலில் அடிபட்டு பலியாவதும் அதிக அளவில் நடந்துவந்தது. இதனால், இங்கு சுரங்கபாதை அமைக்க 2017 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இந்த சுரங்கபாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்து, 4.5 மணி நேரத்தில் சுரங்கப்பாதையை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கினர். 
 
சுரங்கப்பாதை அமைக்க, தொடங்கப்பட்ட பணி அடுத்த சில மணிநேரத்தில் முடிந்து மீண்டும் ரயில் இயக்கப்பட்டதை பார்த்து அப்பகுதி மக்கள் வியந்துவிட்டனர். இவர்களின் வேலையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments