Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிகாரிக்கு கைகுலுக்க மறுத்த இந்திய அதிகாரிகள்!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (21:25 IST)
இந்திய அதிகாரிகள் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை இன்று  சர்வதேச நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில் இந்த வழக்கு விசாரணையை காண வந்திருந்த பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் கைகுலுக்க மறுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 நெதர்லாந்து நாட்டின் ஹாக்யூ நகரில் குல்பூஷண் ஜாதவ் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணை நேரில் பார்க்க  இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் உள்பட பலரும் வருகை தந்தனர். இந்த நிலையில் விசாரணையை காண வந்த அனைவருக்கும் பாகிஸ்தான் அட்டர்னல் ஜெனரல் கைகுலுக்கி வந்தபோது இந்திய அதிகாரிகள் மட்டும் அவருக்கு கைகுலுக்க மறுத்துவிட்டனர். இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அட்டர்னல் ஜெனரல், அதன் பின் அடுத்த அதிகாரியிடம் கைகுலுக்க சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது. புலுவாமா தாக்குதலுக்கு பின்னர் ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையே இந்தியர்கள் வெறுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments