Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளி செங்கலால் கட்டப்படும் ராமர் கோவில்! – கிலோ கணக்கில் வெள்ளி நன்கொடை!

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (08:20 IST)
அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலுக்கு வெள்ளி செங்கற்களை கொண்டு கருவறை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைக்க உள்ளார். இந்நிலையில் ராமர் கோவிலின் கருவறை பகுதியை வெள்ளி செங்கற்களால் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால்தாஸ் வெள்ளி செங்கல் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்திய தங்க சங்கம் சார்பில் 33 கிலோ 664 கிராம் அளவுக் கொண்ட வெள்ளிக்கட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை கொண்டு கருவறையை நிர்மாணிக்க இவை கட்டுமான பணிகளை மேலாண்மை செய்யும் அனில் மிஸ்ராவிடம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments