Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அக்டோபரில் உச்சமடையும் மூன்றாவது அலை!? – பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:06 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சமடையும் என கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் குறித்து கூறியுள்ள நிலையில், அக்டோபரில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை உச்சமடையும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மூன்றாம் அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments