Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாடகர் அட்னான் சமிக்கு இந்தியக் குடியுரிமை : மத்திய அரசு அறிவிப்பு

அட்னான் சமிக்கு இந்திய குடியுரிமை

பாடகர் அட்னான் சமிக்கு இந்தியக் குடியுரிமை : மத்திய அரசு அறிவிப்பு
, வியாழன், 31 டிசம்பர் 2015 (18:08 IST)
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் அட்னான் சமிக்கு மத்திய அரசு இந்தியக் குடியுரிமை வழங்கியுள்ளது.


 

 
அட்னன் சமி பிரபல இந்தி பாடகர் ஆவார். இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் மும்பயில் வசித்து வந்தார். இவர் இந்தியில் பாடி பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பல திரைப்படங்களில் பாடியுள்ளார். பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.   நடித்தும் உள்ளார்.
 
இவர் 2001 ஆம் ஆண்டிலிருந்து, மும்பையில் வசித்து வந்தாலும், பாகிஸ்தான் குடியுரிமையிலேயே வாழ்ந்தார். அவர் இந்திய குடியுரிமை பெற ஏற்கனவே விண்ணப்பித்திருந்தர். தற்போது அவர் தனது பாகிஸ்தான் குடியுரிமையை துறந்து விட்டதையடுத்து, அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடிவெடுத்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இசையுலகிற்கு சமி செய்துள்ள சேவையை கருத்தில் கொண்டும், இந்தியாவை அவர் தனது வீடாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலும், அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
இருந்தாலும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சமிக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது என்று சிவசேனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது

Share this Story:

Follow Webdunia tamil