Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடத்தப்பட்ட இந்திய நர்சுகளுக்கு வேலை அளிக்கும் தொழிலதிபர்

Webdunia
புதன், 9 ஜூலை 2014 (12:33 IST)
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளால் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள நர்சுகளுக்கு ஐக்கிய அரபுக் குடியரசில் வேலை அளிக்க தயாராக உள்ளதாக இந்திய தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய அரபுக் குடியரசு, இந்தியா, எகிப்து போன்ற நாடுகளில் மருத்துவமனைகளை நடத்திவரும் பி.ஆர். ஷெட்டி என்னும் இந்திய தொழிலதிபர், கடும் பதற்றம் நிலவி வரும் ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளால் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள நர்சுகளுக்கு ஐக்கிய அரபுக் குடியரசில் வேலை அளிக்க தயாராக உள்ளதாகவும், தன்னுடைய மருத்துவமனைகளில் தற்போது பணியிடங்கள் இல்லாவிட்டாலும், இந்த நர்சுகளை ஐக்கிய அரபுக் குடியரசில் பாதுகாப்பான இடங்களில் வேலைக்கு சேர்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக பேசிய ஷெட்டி, ஈராக்கில் இந்திய நர்சுகள் கடத்தப்பட்ட சம்பவம் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தற்போது அவர்கள் பத்திரமாக திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அவர்கள் வேலையை விட்டு, வருவாய் பெற முடியாத சூழலில் உள்ளனர். அதனால் அவர்களுக்கு வேலை அளிக்க முடிவு செய்தேன்.
 
இது தொடர்பாக நான் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம்   பேசியபோது, அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் எனக் கூறிய அவர், கடத்தப்பட்ட நசுகளை பத்திரமாக மீட்க இந்திய வெளியுறவு துறை, மாநில அரசுகள் கடினமாக உழைதுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments