Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் சென்ற ராணுவ வீரர்கள் தலைமறைவா? விசாரணையில் ரயில்வே காவல்துறை

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (18:46 IST)
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்த 10 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேற்கு வங்கத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதிக்கு சிறப்பு ரயிலில் 83 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். முகல்சராய் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டபோது வீரர்களை எண்ணும் பணி நடந்தது.  
 
அப்போது 83 வீரர்களில் 10 பேர் குறைவாக இருந்துள்ளனர். மாயமான 10 வீரர்களும் பர்தமன் மற்றும் தன்பாத் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது மாயமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
 
இதையடுத்து மாயமான 10 வீரர்கள் மீது தலைமறைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments