Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்தில் இளைஞர்களுக்கு குறுகிய கால பணிகள்! – இந்திய ராணுவத்தின் புதிய திட்டம்!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (08:21 IST)
இந்திய இராணுவத்தில் புதிய முயற்சியாக இளைஞர்களுக்கு 3 ஆண்டுகால குறுகிய பணிகள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகில் அதிக அளவு இராணுவ துருப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 13 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் உள்ள இந்திய இராணுவத்தின் மீது இளைஞர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் பலர் ராணுவத்தில் சேர்ந்து குறுகிய காலம் பணி புரிவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த இந்திய ராணுவ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

”டூர் ஆஃப் டூட்டி” எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டு காலம் வரை இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரியலாம். கல்வி, உடல் தகுதி போன்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு குறுகிய கால பணிகள் அளிப்பதன் மூலம் இளைஞர்கள் பலர் ராணுவ பணிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் ராணுவத்திற்கான செலவுகளும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments