Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலச்சரிவு நிவாரண பணிக்கு 3 நாளில் கட்டப்பட்ட பாலம்.. இந்திய ராணுவம் சாதனை..!

Siva
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (06:40 IST)
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக இந்திய ராணுவம் மூன்றே நாளில் பாலம் கட்டிய சாதனை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வயநாடு பகுதிகளில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர் என்றும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்கு பாதை இல்லாததால் இந்திய ராணுவம் 20 டன் எடை கொண்ட பாலத்தை கட்டியுள்ளது. இந்த பாலம் 90 டன் எடையுள்ள எடையை தாங்கக்கூடியது என்றும் இந்த பெய்லி பாலத்தினை மூன்றே நாட்களில் கன மழையிலும் போராடி கட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

190 அடி நீளம் உள்ள இந்த பெய்லி பாலத்தை கட்டும் பணியை நேற்று மாலை இந்திய ராணுவம் முடித்த நிலையில் இந்த பாலத்தின் வழியாக மீட்பு குழுவினர் சென்று மீட்பு பணியை செய்து வருகின்றனர். 350 பேர் கொண்ட இந்திய ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளுக்காக இந்த பாலத்தை கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments