நிலச்சரிவு நிவாரண பணிக்கு 3 நாளில் கட்டப்பட்ட பாலம்.. இந்திய ராணுவம் சாதனை..!

Siva
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (06:40 IST)
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக இந்திய ராணுவம் மூன்றே நாளில் பாலம் கட்டிய சாதனை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வயநாடு பகுதிகளில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர் என்றும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்கு பாதை இல்லாததால் இந்திய ராணுவம் 20 டன் எடை கொண்ட பாலத்தை கட்டியுள்ளது. இந்த பாலம் 90 டன் எடையுள்ள எடையை தாங்கக்கூடியது என்றும் இந்த பெய்லி பாலத்தினை மூன்றே நாட்களில் கன மழையிலும் போராடி கட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

190 அடி நீளம் உள்ள இந்த பெய்லி பாலத்தை கட்டும் பணியை நேற்று மாலை இந்திய ராணுவம் முடித்த நிலையில் இந்த பாலத்தின் வழியாக மீட்பு குழுவினர் சென்று மீட்பு பணியை செய்து வருகின்றனர். 350 பேர் கொண்ட இந்திய ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளுக்காக இந்த பாலத்தை கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments