Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி செய்ததற்கு காசு கேட்டும் விமானப்படை: தள்ளுபடி கோரும் கேரளா!

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (09:25 IST)
கேரள வெள்ளத்தின் போது உதவியதற்கு இந்திய விமானப்படை ரூ.113 கோடி தரும்படி கேரள அரசை கேட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு கேரளாவில் வெள்ளம் வந்த போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை செயல்பட்டது. ஆனால், இப்போது மீட்பு பணியில் உதவியதற்காக குறிப்பிட்ட தொகையை அளிக்கும்படி கேட்டுள்ளது. 
 
இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு விமானப்படை கோரும் தொகையை தள்ளுபடி செய்யுமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
2017 ஆம் ஆண்டு ஒக்கி புயல் மற்றும் 2018 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கினால் கேரளா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக ரூ.31 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், ரூ.2 ஆயிரத்து 900 கோடி மட்டுமே வந்துள்ளது. 
 
எனவே மீட்புப் பணிக்காக விமானப்படை கேட்டுள்ள ரூ.113 கோடி  தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments