Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வீரர்களுடன் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மாயம்: அருணாச்சல பிரதேசத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (06:03 IST)
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு மோசமான வானிலை உள்ளது. இந்த நிலையில் மூன்று ராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் திடீரென மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
இதுகுறித்து அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டரில் கூறியபோது, '‘வடகிழக்கு மாநிலங்களில் மோசமான வானிலை உள்ளது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் காணாமல்போன விமானப்படை விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது’ என கூறியுள்ளார்
 
காணாமல் போன ஹெலிகாப்டர் அருணாச்சலபிரதேச மாநிலத்தின் பாபம் பரே மாவட்டம் சாகலி அருகே சென்றபோது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர்களோடு அந்த பகுதி பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments