Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாவூத் இப்ராஹிம் நிச்சமாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவார் - ராஜ்நாத் சிங் தகவல்

தாவூத் இப்ராஹிம் நிச்சமாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவார் - ராஜ்நாத் சிங் தகவல்
, திங்கள், 11 மே 2015 (13:30 IST)
மும்பை குண்டுவெடிப்பில் சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு நிச்சயமாக கொண்டுவரப்படுவார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
 
இது குறித்து மக்களைவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதற்கான நம்பகத்தகமான தகவல்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிமை தொடர்ந்து இந்தியா கண்காணித்து வருகிறது.
 
மேலும் அவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil