சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

Siva
ஞாயிறு, 11 மே 2025 (08:27 IST)
பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
போர் நிறுத்த  உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் சில இடங்களில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்று கூறிய அவர், பாகிஸ்தானின் அத்துமீறல் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
 
நேற்று மாலை ஐந்து மணியுடன் தாக்குதலை நிறுத்துகிறோம் என்று இந்தியா - பாகிஸ்தான் அறிவித்த நிலையில், ஒரு சில மணி நேரங்களில் ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
 
இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தான் க்குதல் நடத்தினால், மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments