Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

Siva
ஞாயிறு, 11 மே 2025 (08:27 IST)
பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
போர் நிறுத்த  உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் சில இடங்களில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்று கூறிய அவர், பாகிஸ்தானின் அத்துமீறல் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
 
நேற்று மாலை ஐந்து மணியுடன் தாக்குதலை நிறுத்துகிறோம் என்று இந்தியா - பாகிஸ்தான் அறிவித்த நிலையில், ஒரு சில மணி நேரங்களில் ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
 
இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தான் க்குதல் நடத்தினால், மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவழியாக அமலுக்கு வந்த போர் நிறுத்தம்! காஷ்மீரில் திரும்பியது இயல்புநிலை!

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments