Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா - சிங்கப்பூர் விமான சேவை துவக்கம்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (17:06 IST)
நீண்ட இடைவேளைக்கு பின்னர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை கொரோனா வைரஸ் காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது 
 
இந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியது. சென்னை - சிங்கப்பூர், டெல்லி - சிங்கப்பூர் மற்றும் மும்பை - சிங்கப்பூர் ஆகிய விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தினமும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments