Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை அட்டாக் போன்று மீண்டும் ஒன்று: இந்தியாவுக்கு வார்னிங்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (18:30 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் அடுத்தடுத்து சில தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இப்போது அந்த தாக்குதல்கள் தணிந்து அமைதியான சூழல் நிலவுகிறது. 
 
இந்நிலையில், இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா மும்பையில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் இந்தியாவில் ஒரு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக பகீர் தகவலை வெலியிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு, உலகின் பல நாடுகளும் தொடர்ந்து தீவிரவாத பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத தாக்குதலை முடிவுக் கொண்டு வர அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 
சமீபத்தில் மிக மோசமான தாக்குதலை காஷ்மீரில் நாங்கள் சந்தித்தோம். இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டு வரும் தீவிரவாதிகளின் முயற்சி இது. ஆனால் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தியா எப்போதுமே தயாராக உள்ளது. 
 
பாகிஸ்தான் ஆதரவு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் பல்வேறு வழிகள் வழியாகவும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கடல் வழியாக தாக்குதல் நடத்த பெரிய அளவில் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பையில் 2008 ஆம் ஆண்டு கடல் வழியாக வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் நடத்தினர். அதேபோல் மீண்டும் ஒரு தாக்குதல் நடக்க வாய்புள்ளதாக அவர் எச்சரித்தும் உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments