Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு பெட்ரோல் & டீசல் அனுப்பிய இந்தியா!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:43 IST)
இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. 

 
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. ரூ.110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.94 எனவும் விற்பனையாகிறது.
 
இந்தியாவில் நிலைமை இப்படி இருக்கும் சூழ்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவு போன்ற பொருட்களுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலங்கையில் தினமும் 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க  இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும்: பாகிஸ்தான் அமைச்சர்..!

மணி விழா கண்ட 70 வயது ஆன்மீக தம்பதிகளுக்கு சிறப்பு விழா! - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையில்லா வீடு! - தமிழக அரசு அரசாணை!

தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுமி! மதுரை தனியார் பள்ளியின் உரிமம் ரத்து!

கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து! தமிழர்கள் உட்பட 14 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments