Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் 3 ஆம் கட்டத்தில் கொரோனா தொற்று?

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (10:37 IST)
கொரோனா நான்கு கட்டங்களாக பரவுவதாகவும், இந்தியா அதில் 3 ஆம் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்  நிலையில் இதில் இந்தியா ஒன்றும் விதி விளக்கல்ல. ஆம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது, 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கேராளாவிலும் நோய் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் கொரோனா நான்கு கட்டங்களாக பரவுவதாகவும் இந்தியா அதில் 3 ஆம் கட்டத்தில் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டத்தை நெருங்கும் நிலை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது. 
கொரோனாவின் நான்கு கட்டங்கள்: 
 
1. இறக்குமதி பரவல்: 
கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கு கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படுவது. 
 
2. உள்நாட்டு பரவல்: 
வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது.  
 
3. சமூக பரவல்: 
உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது. 
 
4. தொற்றுநோய் பரவல்: 
எங்கு யார் மூலமாகப் பரவியது என அறிய முடியாத அளவிற்கு உள்நாட்டிற்குள் தீவிரமாகப் பரவுவது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments