Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சீல் வைக்க முடிவு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சீல் வைக்க முடிவு
, வெள்ளி, 7 அக்டோபர் 2016 (14:21 IST)
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சீல் வைத்து கண்காணிக்க உள்துறை முடிவு செய்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


 

 
உரி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுடன் இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையையும் சீல் வைக்க முடிவு செய்துள்ளனர்.
 
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் எல்லையை கொண்டிருக்கு நான்கு மாநில முதல்வர்களுடன் ராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகரில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நாட்டுடன் இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையையும் டிசம்பர் மாதம் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெமோவை பார்க்க நர்ஸ் வேடத்தில் சென்ற ரசிகர்