Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்தி வெளியிடுவதில் இந்திய ஊடகம் 2வது இடம்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (20:45 IST)
பொய்யான செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகம் உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம் அண்மையில் உலக அளவில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பெரும்பாலான இந்திய ஊடகங்கள் நம்பகத்தன்மை அற்ற செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்திய ஊடகங்கள் வதந்திகளைச் செய்திகளாக வெளியிடுவது தெரியவந்துள்ளது. உலக அளவில் நம்பகத்தன்மையற்ற ஊடக நிறுவனங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. 3வது இடத்தில் அயர்லாந்து இடம்பெற்றுள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்காக வெளியிடப்படும் செய்திகளை தாங்கள் நம்புவதில்லை என பெரும்பாலான மக்கள் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவில் வெளியானது Google Pixel 10! - சிறப்பம்சங்கள் விலை நிலவரம்!

ஹோம்வொர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்.. பதிலுக்கு துப்பாக்கியால் சுட்ட மாணவன்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments