கச்சா எண்ணெய் தடையால் பாதிப்பு வராது! – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (09:33 IST)
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவில் எந்த பாதிப்பும் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் சர்வதேச பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் கிடுகிடுவென விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தபோது, சர்வதேச சந்தை நிலவரம் மோசமானாலும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு வராது. மக்களின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளது. தட்டுப்பாடு இருக்காது என்றாலும் விலையேற்றம் இருக்குமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments