Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு, மஞ்சள் பூஞ்சைகளை தொடர்ந்து பச்சை பூஞ்சை! - பீதியில் மக்கள்

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (10:43 IST)
இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து தற்போது பச்சை பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாடு முழுவதும் பலர் கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மருந்துகள், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து, வெள்ளை மற்றும் மஞ்சல் பூஞ்சை தொற்றுகளும் ஒரு சிலருக்கு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பச்சை பூஞ்சை தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 வயது நபருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மும்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பச்சை பூஞ்சை தொற்று பதிவாவது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாராலும் நாங்கள் மிரட்டப்படவில்லை: ஆளுனர் குற்றச்சாட்டுக்கு துணை வேந்தர்கள் பதில்..!

வீடுகள்தோறும் குறைந்த விலை இண்டெர்நெட்! வாட்ஸப்பில் இ-சேவை! - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி? அமைச்சரவை மாற்றமா?

ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கு தாலி கட்டிய வாலிபர்.. மணமகள்கள் மகிழ்ச்சி.!

திமுகவுக்கு அடுத்த சிக்கல்: `சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments