Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய தடகளப் போட்டியில் மீண்டும் தங்கம் – 1500 மீட்டர் போட்டியில் அசத்திய சித்ரா !

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (10:32 IST)
கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப்போட்டிகளின் கடைசி நாளில் இந்தியாவுக்கான மூன்றாவது தங்கத்தை வென்றுள்ளார் கேரளாவை சேர்ந்த சித்ரா.
 
23 ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி நாளான இன்று 1500 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் கேரளாவைச் சேர்ந்த பியு சித்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.பந்தய தூரத்தை அவர் 4 நிமிடம் 14.56 வினாடியில் கடந்து சாதனைப் புரிந்துள்ளார்.

ஏற்கனவே  800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று முதல் தங்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

இந்தியா இந்த தடகளப்போட்டிகளில் 3 தங்கம் , 8 வெள்ளி மற்றும் 7 வென்கலம் ஆகிய பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments