Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் முதல் இளைஞர் பலி: எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (12:14 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் வயதானவர்கள் மட்டுமே அதிகமாக உயிரிழப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 341 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களே கொரோனாவால் பலியாகி இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு முதன்முறையாக 38 வயது நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை சேர்ந்த இளம் நபர் உயிரிழந்துள்ள நிலையில் மகராஷ்டிராவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments