Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு! – 14 ஆயிரத்தை நெருங்கிய இந்தியா!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (08:24 IST)
இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட தொடங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 1.076 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தேசிய அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரம், டெல்லி, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போது குஜராத் மாநிலத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் முதன்மையில் உள்ள மகாராஷ்டிரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 200 ஐ நெருங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments