Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு! – 14 ஆயிரத்தை நெருங்கிய இந்தியா!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (08:24 IST)
இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட தொடங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 1.076 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தேசிய அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரம், டெல்லி, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போது குஜராத் மாநிலத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் முதன்மையில் உள்ள மகாராஷ்டிரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 200 ஐ நெருங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments