Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

Siva
திங்கள், 23 ஜூன் 2025 (07:25 IST)
நேற்று அதிகாலை ஈரானில் உள்ள மூன்று அணுமின் நிலையங்களை அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்கியது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்தியை அடுத்து, மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது. 
 
ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று அதிரடியாக ஈரான் மீது அமெரிக்கா எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தாக்குதல் நடத்தியது. 
 
இந்த தாக்குதலில் ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் தெரிவித்து வரும் நிலையில், நேற்று ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியிருந்தார். 
 
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலை ரகசியம் காப்பதற்காக பி2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் பரவின. 
 
இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், இந்திய வான்வெளியை பி2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தவில்லை என்று உண்மை சரிபார்க்கும் குழு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments