Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்க இருக்கவங்களுக்கு வேண்டாமா? – மாத்திரை, சானிட்டைசர் ஏற்றுமதிக்கு தடை!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (11:27 IST)
இந்தியாவிலிருந்து சானிட்டைசர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் சானிட்டைசர், முகக்கவசங்கள் போன்றவற்றை மக்கள் அதிகமாக வாங்க தொடங்கியுள்ளனர். இதை பயன்படுத்தி சிலர் சானிட்டைசர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் உலக அளவிலேயே சானிட்டைசர், முகக்கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. மலேரியாவுக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகளை கொரோனாவுக்கு பரிந்துரைத்துள்ளதால் அதை மற்ற நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்ய பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் மலேரியா மருந்துகள், சானிட்டைசர்கள், முகக்கவசங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது. தற்போது இருக்கும் கை இருப்புகள் இந்திய மக்களுக்கு அவசியம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments