Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.வங்கத்திலும் தொகுதி உடன்பாடு.. சோனியா காந்தி தலையிட்டு பேச்சுவார்த்தை..!

Mahendran
வியாழன், 22 பிப்ரவரி 2024 (18:59 IST)
இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு படிப்படியாக சுமூகமாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதிக்கு உடன்பாடு ஏற்பட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் பெரும் சர்ச்சைக்குரிய மாநிலமாக இருந்த மேற்கு வங்கத்திலும் தற்போது சோனியா காந்தி தலையீடு காரணமாக மம்தா பானர்ஜியுடன் சுமூகமாக தொகுதியுடன் உடன்பாடு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்குகளை குறித்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியை 5 இடங்களிலும் போட்டி விட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

முன்னதாக இரண்டு தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு தர முடியும் என்று மம்தா பானர்ஜி கூறியதை அடுத்து சோனியா காந்தி, மம்தாவிடம்  பேச்சு வார்த்தை நடத்தி தற்போது 5 தொகுதிகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments