Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய – சீன எல்லையில் 50 ஆயிரம் வீரர்கள் குவிப்பு! – பீரங்கியை நிறுத்திய சீனா?

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (10:39 IST)
கடந்த ஆண்டு முதலாக பதற்றம் நிறைந்த பகுதியாக அறியப்படும் லடாக் எல்லையில் மீண்டும் இந்திய ராணுவத்திலிருந்து 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சீன – இந்திய எல்லையான லடாக்கில் சீன – இந்திய ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீன பொருட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதுடன், இரு நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தது. இறுதியாக இரு நாட்டு படைகளும் கணிசமான ராணுவ துருப்புகளையும், தளவாடங்களையும் திரும்ப பெற்றன.

தற்போது லடாக் எல்லையில் 2 லட்சம் இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ள நிலையில், அத்துமீறல் சம்பவங்கள் தொடர்வதால் மேலும் 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதேசமயம் சீனாவும் எல்லையில் போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் உள்ளிட்டவற்றை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments