Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிபிசி அலுவலகங்களில் 3வது நாளாக சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:00 IST)
டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறையினர் சோதனை தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலங்களில் வருமானவரித்துறையினர் மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பிபிசி அலுவலகங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்ததை அடுத்து வருமானவரித்துறை என சோதனை செய்வதாக கூறப்பட்டாலும் பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தான் இந்த சோதனை செய்யப்படுகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த சோதனை முடிவடைந்ததும் என்னென்ன முக்கிய ஆவணங்கள் சிக்கியது என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிபிசி அலுவலக சோதனைக்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா உள்பட பல அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதை.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

2வது நாளாக தங்கம் விலை உயர்வு.. மீண்டும் ரூ.54,000ஐ நெருங்கிய சவரன்..!

16 வயது சிறுமியுடன் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்த கும்பல்.. வீடுபுகுந்து வெட்டியதால் அதிர்ச்சி..!

பாலியல் புகாரில் சிக்கிய பூசாரி கைது.. கொடைக்கானலில் தலைமறைவாக இருந்ததாக தகவல்..!

தனியார் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி சட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்..!

ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 178 பேர் உடல்நலம் பாதிப்பு.. பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments