Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தூட் நிறுவனங்களில் அதிரடி ரெய்டு: கருப்பு பண பதுக்கல் புகார்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (11:27 IST)
முத்தூட் நிதி நிறுவனத்தின் முக்கியமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்தியாவில் அதிக அளவில் தங்க நகைக்கடன் வழங்கும் நிறுவனம் முத்தூட் நிறுவனம்.


 
 
முத்தூட் பைனான்ஸ், முத்தூட் மினி, முத்தூட் பச்சப்பன் என்ற நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குகின்றன. முத்தூட் குழுமத்தின் மொத்த வர்த்தகத்தில் தங்க நகைக்கடன் 90 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனம் கொச்சியை தலைமையமாக கொண்டுள்ளது.
 
நாடு முழுவதும் உள்ள முத்தூட் கிளைகளில் 85 சதவீதம் தென் மாநிலங்களிலேயே உள்ளன. நாடு முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட இந்த நிறுவனத்தில் 30000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
 
இந்நிலையில் முத்தூட் நிறுவனம் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்பதால் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முத்தூட் பின்கார்ப், முத்தூட் பச்சப்பன் நிறுவனங்களிலும் மினி முத்தூட், முத்தூட் மெர்க்கண்டைல் நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தங்க நகைக்கடன் கொடுப்பதில் முறைகேடு மற்றும் கருப்பு பண பதுக்கல் தொடர்பாக எழுந்த புகாரினை அடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments