Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் ஆர்.ஆர் தொகுதி தேர்தல் தள்ளிவைப்பு!

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (20:03 IST)
கர்நாடகாவில் வாக்காளர் அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 
 
கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டைகளை பணம் கொடுத்து அரசியல் கட்சியினர் வாங்கியதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
 
இதையடுத்து, பறக்கும் படையினர் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கே பத்தாயிரம் வாக்காளர் அட்டைகள் சிக்கின. வாக்காளர் அடையாள அட்டை சிக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இதற்கிடையே, அரசியல் கட்சிகள் வாக்காளர் அட்டை சிக்கிய தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி வந்தனர். 
 
இந்த நிலையில் ஆர்.ஆர் தொகுதியில் மாட்டும் நாளை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெற்று, மே31ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அயோத்தில் வெற்றியை கொடுக்காத ராமர் கோவில்.! தகர்ந்தது பாஜகவின் கனவு.!!

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..! ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை..!!

தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடைய செய்யாது.! 2026-ல் மகத்தான வெற்றி பெறுவோம்.! இபிஎஸ் உருக்கம்..!!

நம்பகத்தன்மையை இழந்த மோடி.! பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா வலியுறுத்தல்..!!

தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. யாருக்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments