Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அம்பேத்கரும்.. மோடியும்’ புத்தகம் வெளியீடு...! பங்கேற்காத இளையராஜா?

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:26 IST)
இன்று ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ப்ளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை, அம்பேத்கரின் சிந்தனையோடு ஒப்பிட்டு “அம்பேத்கரும், மோடியும்: சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல்வீரர்களின் நடவடிக்கையும்” என்ற ஆங்கில புத்தகம் எழுதப்பட்டது.

இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பியுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்த அணிந்துரை குறித்து விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இன்று இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments