Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமற்றது? – மருத்துவ நிபுணர்கள் கருத்து!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (08:44 IST)
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது அவசியமற்றது என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் 18வயதிற்குட்பட்ட சிறுவர்கள், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் துறை தலைவர் “குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமற்றது. பெரும்பாலும் கிடைத்துள்ள தகவல்களின்படி பெரியவர்கள், துணை நோய் பாதிப்பு உள்ளவர்களாலேயே அதிகம் கொரோனா பரவுகிறது எனும்போது அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்துவதை உறுதிபடுத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிராக குழந்தைகளுக்கு போடும் எந்தவொரு தடுப்பூசியும், சவப்பெட்டிகான கடைசி ஆணியாக அமைந்துவிட கூடாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments