Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய சதி: மத்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2015 (21:15 IST)
பிகார் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய சதி நடப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு (ஐ.பி.) எச்சரித்துள்ளது.
 

 
நாளை பிகார் மாநிலம் பாட்னா மற்றும் முசாபர்பூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்குகிறார். இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்பத்தூரில் மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி பாட்னாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு தொடர் குண்டுகள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments