Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் இந்திய ராணுவ விமானங்கள் ஒத்திகை: போருக்கு ஆயத்தமா?

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (11:45 IST)
லாடாக் எல்லையில் இந்திய ராணுவ விமானங்கள் ஒத்திகையில் ஈடுப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியானார்கள்.  
 
எனினும் சீன ராணுவம் எல்லையில் அத்து மீறியதாலேயே இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா – இந்தியா இடையே உறவுநிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு பிறகு லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவம் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியது. 
 
தற்போது இந்திய, சீன எல்லையில் நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானங்களில் வீரர்கள் ஒத்திகை பார்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments