Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி மீது வழக்கு தொடர்வேன் - வாட்டாள் நாகராஜ் ஆவேசம்

Webdunia
வியாழன், 3 மே 2018 (11:26 IST)
சாம்ராஜ் நகருக்குள் வராத பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு தொடுக்கப் போவதாக கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
வருகிற மே 12 ந் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் ஆளுங் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டுமென, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மோடிக்கு  தைரியம் இருந்தால் ராசியில்லாத நகரமாக கருதப்படும் சாம்ராஜ் நகருக்குள் காலடி வைக்கட்டும் என்று சவால் விட்டார். ஏனென்றால் சாம்ராஜ்நகர் நகருக்குள் காலடி வைத்தால் கர்நாடகாவில் ஆட்சி பறிபோகும் என்பது அங்குள்ள‌ அரசியல்வாதிகளின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் கர்நாடகத்திற்கு சென்ற மோடி சாம்ராஜ் நகருக்கு செல்லவில்லை.
இதனையடுத்து கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், பிரதமர் மோடி சாம்ராஜ் நகருக்கு வராதது தவறென்றும், மூடநம்பிக்கைக்கு எதிராக பேசும் மோடி, ஏன் அதனை கடைப்பிடிக்கவில்லை என கேட்டுள்ளார். 
 
சாம்ராஜ்நகரை புறக்கணித்து இங்குள்ள மக்களின் மனதை காயப்படுத்திய மோடி மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments