Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நான் ஒரு நல்ல மாணவனாக இருந்ததில்லை’: எய்ம்ஸ் மாணவர்களிடம் பேசிய மோடி

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2014 (16:59 IST)
”நான்  ஒரு நல்ல மாணவனாக இருந்ததில்லை; அதனால் படிக்கும் காலத்தில் விருதுகளைப் பெற்றதில்லை” என்று மருத்துவ மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
 
டெல்லி  'எய்ம்ஸ்' மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு  பேசுகையில் இவ்வாறு தெரிவித்த அவர், "மாணவர்கள் மாணவர்களாகவே இருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் மாணவனை உயிர்ப்புடன் திகழ வைக்க வேண்டும்; அப்போதுதான் ஏதாவது செய்ய முடியும். பட்டம் பெற்றதும்  மாணவப் பருவம் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாது" என்றும் அறிவுறுத்தினார்.
 
அத்துடன், மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா இன்னும் ஒரு படி பின் தங்கியிருப்பதாகக் கூறிய மோடி, இந்தியா இன்னும்  அதிகம் சாதிக்க வேண்டியிருக்கிறது என்றும்,  மாணவர்கள் நாட்டின் வளர்ச்சியில் முனைப்புடன் பங்கெடுக்க  வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

Show comments