Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர் பிரச்சனையில் இலங்கைக்கு ஐடியா கொடுக்கும் சுப்பிரமணியசாமி

Webdunia
புதன், 26 நவம்பர் 2014 (20:58 IST)
இலங்கை கடற்படையினரால் வெவ்வேறு காலகட்டங்களில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்தேன். அவரிடம் தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.
 
சில வாரங்களுக்கு முன்னர், "தமிழக மீனவர்களை விடுதலை செய்துவிடுங்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்குமாறு அவர்களை வலியுறுத்தும் பெரும் முதலாளிகளின் படகுகளை சிறைபிடியுங்கள் என இலங்கைக்கு நானே வலியுறுத்தினேன்" என சுப்பிரமணியசாமி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், மீனவர்கள் படகுகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments